14. அதனாலே நாங்கள் ஆண்டவருடைய வார்த்தையாக உங்களுக்குச் சொல்லுகிறதாவது; உயிரோடிருந்து, ஆண்டவருடைய வருகைக்குக் காத் திருக்கிற நாம் ஏற்கனவே மரித்தவர் களுக்கு முந்திக்கொள்ளமாட்டோம். (1 கொரி. 15:3.) * 14. ஆண்டவருடைய வார்த்தை என்பது அப்போஸ்தலருக்கு சேசுநாதரே நேராய் வெளிப்படுத்தின சத்தியமென்று நினைக்கத்தகும். முந்திக்கொள்ளமாட்டோம் என்பது அவர்களுக்கு முன்னும் அவர்களில்லாமலும் நாம் பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பதில்லையென்று அர்த்தமாம். ஆகையால் இவ்விடத்தில் அப்போஸ்தலர் தாமும் அப்போதிருந்த தெசலோனிக்கேயரும் ஆண்டவர் வருமளவும் உயிரோடிருப்பதாகச் சொல்லாமல், உலக முடிவில் இருப்பவர்களைக் குறித்துத் தன்மையிடமாகப் பேசுகிறார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save