23. ஏனெனில் அழிவுள்ள வித்தினாலேயல்ல; ஜீவியரும் என்றென்றைக்கும் நிலைநிற்பவருமாகிய கடவுளுடைய வார்த்தையான அழியா வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப் பட்டிருக்கிறீர்கள். *** 22-23. நாம் ஒருவரையொருவர் அன்போடு சிநேகிப்பதற்கு நாம் அடைந்திருக்கிற மறுபிறப்பே ஆதாரமான முகாந்தரமாகும். நமது வெளி நிலைமையும் அந்தஸ்தும் எப்படியிருந்தாலும், ஞானஸ்நானத்தின் வழியாய் நாம் அடைந்த மறுபிறப்பினாலே நாம் எல்லாரும் சர்வேசுரனுடைய பிள்ளைகளாகவும், ஒருவருக்கொருவர் சமானஸ்தராகவும், சகோதரராகவும் இருக்கிறோம். அழிவுக்குரிய வித்தினால் அல்ல, அழியா வித்தாகிய நித்திய கடவுளுடைய வாக்கியத்தை விசுவசித்து, ஞானஸ்நானத்தால் அந்தக் கடவுளுக்கு நாம் பிள்ளைகளாகிறதினால், ஒருவரையொருவர் குறையற்ற சிநேகத்தோடு நேசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save